திருச்சிராப்பள்ளி, செப்.2- கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சென்னை யைச் சேர்ந்த ஜும்மா கான் என்பவர் வைத்திருந்த ஐந்து லேப்டாப்களிலும் மறைத்து எடுத்து வந்த 458 கிராம் எடை யுள்ள ரூ17.68 லட்சம் மதிப்புடைய தங்க படலங்களை பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.