மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி ஊராட்சியில் ஆறு வார்டு உறுப்பினர்கள். இதில் மூன்று பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வர்கள். மற்ற மூன்று பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில் ஐவர் பெண்கள். ஒருவர் ஆண் உறுப்பினர். இதில் மகிழ்ச்சியான கூடுதல் விஷயம் தலைவர் பெண். ஊராட்சி மன்றத் தலைவர் செங்கொடி குமாரராஜா சிபிஎம் கட்சியைச் சேர்ந்த வர். 11-ல் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவராக அமுதா ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவர் சிபிஐ கட்சியைச் சேர்ந்தவர். திருவாரூர் மாவட்டத்தில் முன் மாதிரியான விளங்கும் இருள்நீக்கியின் ஊராட்சிமன்ற அமைப்பு இடதுசாரி ஒற்றுமையின் சின்னமாக விளங்குவது மட்டுமல்ல ஊராட்சிக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும் என்ற உறுதியான நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் இருள்நீக்கி மக்களுக்கும் கோட்டூர் ஒன்றியத்திற்கு பெற்றுத் தந்துள்ளது. தலையாமங்கலத்தில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக சிபிஎம் கட்சி உறுப்பினர் எஸ். ராமதுரை தேர்வு செய்யப்பட்டார். ஏத்தக்குடியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக என். ஜானகி தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டங்களில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம். திரு ஞானம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.டி.கந்தசாமி, டி. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.