11-வது நாளாக பழையாறு மீனவர்கள் போராட்டம்
சீர்காழி, ஆக.2- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கட லுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீன வர்கள் 5 ஆயிரம் பேர் 11-ஆம் நாளான வெள்ளியன்று வரை மீன் பிடிக்கச் செல்ல வில்லை. பழையாறு துறைமுகத்திலிருந்து தடை செய்யப்பட்ட உரிமம் பெறாத அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட 40 விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவதை தடை செய்யக் கோரி, உரிமம் பெற்ற விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் இதர மீனவர்கள் கடந்த 19-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சீர்காழி தாசில்தார் அலு வலகத்தில் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. கண்மணி தலைமையில் கடந்த 21-ந் தேதி நடை பெற்ற பேச்சுவார்த்தையில் தடை செய்ய ப்பட்ட அதிவேக எஞ்சின்களை விசைப்பட கிலிருந்து அகற்ற வேண்டும். அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. இருந்தும் தடை செய்யப்பட்ட படகிலிருந்து அதிவேக எஞ்சின்கள் அகற்றப்படாததால் மீன வர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட சிலரின் விசைப்படகுகளில் பொருத்தப்பட்டுள்ள அதி வேக எஞ்சின்களை அதிகாரிகளின் அறிவு ரையின்படி அகற்றி விட்டு சாதாரண எஞ்சின் பொருத்தும் பணியில் வெள்ளியன்று விசைப்படகு உரிமையாளர் ஈடுபட்டனர். பதிவு செய்யப்பட்ட படகுகளிலிருந்து தடை செய்த எஞ்சின்கள் இன்னும் அகற்றப்பட வில்லை. அந்த படகுகளிலிருந்து எஞ்ஜின்க ளை அகற்றும் வரை மீனவர்கள் வேலை நிறு த்தம் தொடர்ந்து நடைபெறும் என விசை ப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் அருள்செழியன் தெரிவித்தார்.