நாகப்பட்டினம், மே 21 -விவசாயம், கடல்வளம், நிலத்தடிநீர், சுற்றுச்சூழல் ஆகிய எல்லா வளத்தையும் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் கொடிய திட்டத்தை எதிர்த்து செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள் குளத்திலும் ஆற்றிலும் இறங்கிப் போராட்டம் செய்தனர்.நாகப்பட்டினம் வட்டம், பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர், அங்குள்ள குளத்தில் இறங்கி, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். வேளாங்கண்ணியை அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர், வெள்ளையாறு, கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் இறங்கி ஹைட்ரோகார்பன் திட்டம் செயற்படுத்தப்பட்டால், மீன்களின் வளம், கடல் வளம், மீனவர்களின் வாழ்வாதாரம் நாசமாகிவிடும் எனக் கூறிப் போராட்டம் நடத்தினர்.