tamilnadu

img

தீப்பிடித்து எரிந்த தேர்தல் அலுவலகம்

தஞ்சாவூர், ஏப்.1-


தஞ்சாவூர் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி, மாநகராட்சி 39 ஆவது வார்டு முனிசிபல் காலனியில் திமுக தேர்தல் பணி அலுவலகம் திறக்கப்பட்டு செயல்படுகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை இரவு திமுகவினர் தேர்தல் பணிகளை முடித்து கொண்டு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.அப்போது நள்ளிரவு 11.45 மணிக்கு தேர்தல் அலுவலக கீற்றுக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதற்குள் கீற்றுக் கொட்டகை அலுவலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அலுவலக குடிசையின் தீயை அணைத்தனர். இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் திமுக-வினர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

;