tamilnadu

தாண்டவன்குளாம் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா

சீர்காழி, ஏப்.4-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளாம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, கல்விச்சீர்வழங்கும் விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ஊர்ப் பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான கணினி, பிரிண்டர், நாற்காலிகள், தட்டு, டம்ளர், புத்தகங்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை, அப்பகுதி நவநீத கண்ணன் ஆலயத்திலிருந்து பள்ளிக்கு சீராக எடுத்து வந்து கொடுத்தனர்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தங்கசேகர் வரவேற்றார். ஊழல் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜெகசண்முகம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயலட்சுமி, தலைமையாசிரியர்கள் ராஜேந்திரன், சேகரன், பாலகிருஷ்ணன், ஜெயபாரதி, ஆனந்த ஜோதி, சிற்றரசு மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியை மஞ்சுளா ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் அதியமான் நன்றி கூறினார்.

;