tamilnadu

img

இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அதிராம்பட்டினம் மாணவி சாதனை

தஞ்சாவூர், மே19-அகில இந்திய அளவிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அஸ்மிதா வெண்கலப் பதக்கம்வென்று சாதனை படைத் துள்ளார்.அகில இந்திய அளவிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப்மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள குருநானக்தேவ் பல்கலைக் கழகத்தில் ஆல்இந்திய யூத் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் ஆப் இந் தியா அமைப்பு சார்பில், தமிழக அணியின் சார்பில் மகளிருக்கான இறகுப்பந்து இரட்டையர் பிரிவில்,தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிதாகலந்து கொண்டு, மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்று பள்ளிக்கும், அதிராம்பட்டினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.ஏற்கனவே இவர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்று, தற்போது நடைபெற்றதேசிய அளவிலானப் போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவி அஸ்மிதா, உடற்கல்விஆசிரியர் ஆகியோரை, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், பள்ளித் தலைமை ஆசிரியை எம்.சுராஜ் மற்றும்ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.