சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்த சிறப்புக் கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்றது. இதில் நீரியல் வல்லுநர் ஜனகராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எம்.ராமகிருஷ்ணன், இரா.முரளி, உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.