தஞ்சாவூர், மே12-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் தற்போது கோடை காலத்தில் கடும் வறட்சி நிலவுவதால், நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது, மேலும், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதில் கடந்த சில நாட்களாக தனியார் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சுவது தெரியவந்து ள்ளது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் தடங்கல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் குடிநீரை தென்னந்தோப்புகள், தோட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டாரை வைத்து தண்ணீர் உறிஞ்சுவது, குடிநீரை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால், மின்மோட்டார் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படுவதோடு, வரும் காலங்களில் இணைப்பு வழங்கப்படமாட்டாது. மேலும் அபராதம் வசூல் செய்யப்ப டுவதோடு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படும். எனவே சட்டவிரோதமான முறையில் மின்மோட்டாரை பயன்படுத்து பவர்கள், நடவடிக்கைகளை தவிர்க்க, உடனடியாக அதனை அகற்றிக் கொள்ள வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) மு.பொன்னுசாமி, தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.