திருச்சிராப்பள்ளி, ஜூலை 3- இந்திய ரயில்வேயை தனியாருக்கு கொடுக்கும் நூறு நாள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். 55 வயது அல்லது 30 ஆண்டு கள் பணி முடிந்து இருந்தால் பணி தகுதி அடிப்படையில் கட்டாய ஓய்வு திட்டத்தை கைவிட வேண்டும். மூத்த குடிமக்கள் மானியத்தை கைவிட கோரும் கிவ்-ட்- அப் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். பணிமனை மற்றும் உற்பத்தி பிரிவுகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் போக்கினை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் பொன்மலை கிளைகள் சார்பில் செவ்வா யன்று பொன்மலை ஆர்மரி கேட் முன் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. ஒர்க்சாப் டிவிசன் கோட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொதுச்செயலாளர் மாத்யூ சிரியாக், துணை பொதுச் செயலாளர் மனோ கர், துணை பொதுச் செயலாளர் சந்தானசெல் வம், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், திருச்சி கோட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் பேசி னர். டிவிசன் நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.