tamilnadu

ஆக்கிரமிப்பால் அடைபட்ட குன்னத்தான் பாசன கிளை வாய்க்கால்

சீர்காழி, அக்.30- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேளுர் கிராமத்தில், பிரதான தெற்குராஜன் பாசன வாய்க்காலிலிருந்து கிளை பாசன வாய்க்காலாக பிரிந்து மாதிரவேளுர், கீரங் குடி, கொன்னக்காட்டு படுகை, சரஸ்வதிவிளாகம் ஆகிய கிராமங்கள் வழி யாகச் சென்று குத்தவக்கரை என்ற இடத்தில் அழிஞ்சி யாற்றில் கலக்கிறது.  இந்த வாய்க்கால் குன்னத்தான் வாய்க்கால் என்றும், சிதம்பரநாத புரத்தான் வாய்க்கால் என்றும் அழைக்கப்படு கிறது. ஆரம்ப காலத்திலி ருந்து அப்பகுதியில் உள்ள சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதியையும் வடிகால் வசதி யையும் தந்து கொண்டி ருந்தது. மழை அதிகம் பெய்யும் பொழுதெல்லாம் எளிதில் மழை நீரை அழிஞ்சி யாறு வடிகாலில் கொண்டுப் போய் சேர்த்து பயிரை பாது காக்கும் வாய்க்காலாக இருந்து வருகிறது.  இந்த பாசன கிளை வாய்க்கால் கடந்த ஐந்து ஆண்டு காலமாக, கீரங்குடி மற்றும் கொன்னக்காட்டுப் படுகை ஆகிய கிராமங்களில் மூன்று இடங்களில் ஆக்கி ரமிக்கப்பட்டு அடைக்கப் பட்டுள்ளது. இதனால் பாச னத்திற்கு தண்ணீர் செல்ல முடியாமலும் அதிகப் படியான தண்ணீரை வடிய வைக்க முடியாமலும் உள்ளது. மழை பெய்யத் துவங்கியுள்ளதால், வயல்களில் தேங்கும் நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் பாசன கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.