tamilnadu

img

வேலை நிறுத்தத்திலும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை

திருச்சிராப்பள்ளி, அக்.30- திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனை கள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அரசு மருந்தகம் என 500-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் 6-வது நாளாக புதனன்றும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கி.ஆ.பெ.மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்து வர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் பொதுமக்கள் நலன் கருதி உயிர்காக்கும் அவசர சிகிச்சை பிரிவு, காய்ச்சல் பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில் ஒருபிரிவினர் வருகை பதி வேட்டில் கையெழுத்திடாமல் நோயாளிக ளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.