tamilnadu

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி

திருச்சிராப்பள்ளி, செப்22- திருச்சி மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி அண்ணா விளையாட்டரங்கில் ஞாயிறு அன்று நடைபெற்றது. போட்டிக்கு அசோசியேஷன் தலைவர் இங்கர்சால் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 பிரிவில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் பிரபு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விமலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக செயலாளர் மதன் கென்னடி வரவேற்றார். பொருளாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

;