tamilnadu

img

வட்டாட்சியர் குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை, மார்ச் 3-  மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் தரங்கம்பாடி வட்டாட்சியர் புதிய குடியிருப்பு கட்டடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழனன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு பொறையார் காவல் நிலையம் அருகில் ரூ.60.8 லட்சம் செலவில் புதிய வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு வைத்து பணியை தொடங்கி வைத்தார். தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி, துணை தலைவர் பொன்.ராஜேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் பாஸ்கர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.