திருச்சிராப்பள்ளி, ஜூன் 27- சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொ லையை கண்டித்தும், படுகொலை செய்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் உள்ளிட் டவை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் அபி ஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் எடமலைப் பட்டிபுதூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அபிஷேகபுரம் இடைக் கமிட்டிச் செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். கிளை செயலாளர்கள் லெனின், சிவா, ரவி, கணேசன், ராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி, நிர்மலா, கலியமூர்த்தி, வாலிபர் சங்க அருணாச்சலம் கலந்து கொண்டனர். மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் சமயபுரம் நால்ரோடு அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்து ராஜ், சேகர், பாலகிருஷ்ணன், சேதுராமன், ராபின்சன், ஜோதிபாசு, குணசேகர், காமராஜ், செழியன் கலந்து கொண்டனர். பிள்ளாதுரை கிளை சார்பில் பெரியமாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவி, சேகர், மரகதம், பாண்டியன் பங்கேற்றனர். மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், செல்வராஜ், மனோகரன், சேகர், ஆணைமுத்து, பிச்சை கலந்து கொண்டனர்.
குடவாசல்
சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொ லையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக குடவாசல் விபி சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை தாங்கி னார். மாவட்ட குழு உறுப்பினர் எப்.கொரக் கோரியா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.ராம தாஸ், டி.ஜி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயர்குழு உறுப்பினர் வி. எஸ்.கலியபெருமாள் கண்டன உரையாற்றி னார். மாவட்ட குழு உறுப்பினர் கே.கைலாசம், மாதர் சங்கம் மாவட்ட தலைவர் ஆர்.சுமதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கு.முனியாண்டி, டி.ஜான்கென்னடி, சி.டி.ஜோசப், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் டி.பி.கிஷோர்குமார் கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் என்.இராதா தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.பாலையா, டி.சண்முகம், சி.கருப்பையன், நகர செயலாளர் எஸ்.சாமிநாதன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.சந்திரோதயம் கலந்து கொண்டனர். கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் கே.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மணியன், டி.ஜெயபால், ஆர்.மருதையன், கே.கோபிராஜ் பங்கேற்ற னர்.
தஞ்சாவூர் ரயிலடி
தஞ்சாவூர் ரயிலடி முன்பு ஆர்ப்பாட்டம் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலா ளர் அயனாபுரம் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், நகர ஒருங்கி ணைப்பாளர் தேவா, தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, மாநகரச் செயலாளர் ஆலம்கான், இந்திய ஜனநாயக கட்சி தெற்கு மாவட்ட தலைவர் ச.சிமியோன் சேவியர் ராஜ், நிர்வாகி சித்திர வேல், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலா ளர் துரை.மதிவாணன், சமவெளி விவசாயிகள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சு.பழநிராஜன், சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குரு சாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இக்பால், சட்டமன்ற தொகுதி தலைவர் எஸ்.ஜாகிர் உசேன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு கிளை செயலாளர் டி.கஸ்தூரி, சிபி(எம்.எல்) மக்கள் விடுதலை மாவட்டச் செயலாளர் அருணாச்சலம், தமிழர் தேசிய முன்னணி நிர்வாகி சதா.முத்து கிருஷ்ணன் பங்கேற்றனர்.
அரியலூர்
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அரியலூரில் ஒன்றி யச் செயலாளர் துரை.அருணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு துரைசாமி, மாவட்டக்குழு சிற்றம்ப லம், மலர்கொடி, அருண்பாண்டியன், ஒன்றி யக்குழு கிருஷ்ணன், சந்தானம், சுப்பிரமணி யன் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாராஐன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பி னர்கள் எஸ்.என்டி.துறைராஜ், பி.பத்மாவதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமார், எ.பல்கீஸ் ராதா கலந்து கொண்டனர். தா.பழூர் அண்ணா சிலை முன்பு ஒன்றியம் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை யில் அர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் செயற்குழு உறுப்பினர் எம்.இளங்கோவன் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட குழு உறுப்பினர் எ.தங்கராசு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வராசு, வி.தங்கையன், எஸ்.ஆல்பர்ட்ஏசுதாஸ், கே.பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.