தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைப்பதை கண்டித்தும், நடப்பாண்டு சாகுபடிக்கு புதிய பயிர் கடன் வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 இடங்களில் கூட்டுறவு வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாப்படுகையில் மணி தலைமையிலும், பெரம்பூரில் சங்கத்தின் ஒன்றியத்தலைவர் ஜான்டேவிட் தலைமையிலும், உளுத்துக்குப்பை, நக்கம்பாடி, மறையூர் உள்ளிட்ட 17 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.