tamilnadu

img

குருமூர்த்தியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக29- பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் வியாழனன்று துவாக்குடி அண்ணா வளைவு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாரியம்மாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் மல்லிகா, துணை செயலாளர் கோமதி, மாவட்ட தலைவர் லிங்கராணி ஆகியோர் பேசினர். ஒன்றிய பொருளாளர் கிரிஜா, மகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.