tamilnadu

நூறு நாள் வேலை வழங்கக் கோரி மனுக் கொடுக்கும் போராட்டம் விவசாயிகள் சங்கம் முடிவு

 திருச்சிராப்பள்ளி, பிப்.16- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லக்குழு கூட்டம் அந்தநல்லூரில் சனிக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தங்கதுரை, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  கூட்டத்தில், அந்தநல்லூர் ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெருக மணி 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாசன், பேரூர் 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வமணி ஆகியோரை மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.  மேலும் கூட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக் கோரி வரும் 10-ந் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;