tamilnadu

img

குளத்தில் பிடிபட்ட முதலை

கும்பகோணம். செப்.27- தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருவைக்காவூர் கிராமம் வில்வனேஸ்வரர் கோயில் குளத்தில் பொதுமக்கள் பிரயோகித்து வருகிறார்கள். இந்நிலையில் குளத்தில் முதலை உள்ளதாகத் தகவல் பரவியது. தகவலின் அடிப்படையில்  மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, வனத்துறையினர், பொதுமக்களோடு சேர்ந்து முதலையைத் தேடிப் பிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் குளத்தின் தண்ணீருக்குள் முதலை இருந்ததால் முதலையைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.பிறகு மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு முதலையைத் தேடும் பணிக்கு உத்தரவிட்டார். அதன்படி வியாழன் மாலை தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் முதலை பிடிபட்டது. முதலையின் நீளம் சுமார் 7 அடியும் 50 கிலோ எடையும் இருந்தது. பிடிபட்ட முதலையை வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.