tamilnadu

img

விபத்தில் சிக்கி போராடிய சினை பசுமாடு

தஞ்சாவூர், மே 28- தஞ்சையில் பெண் ஒருவர் பாசமாக வளர்த்த பசு மாடு ஒன்றின் மீது வேன் மோதியதில் பின்பக்க கால் ஒன்று முறிந்து ரத்தம் கொட்டிய நிலையில் பசுவின் கழுத்தை கட்டிக்கொண்டு நடுச்சாலையிலேயே அந்த பெண் கதறி அழுதது அவ்வழியே சென்றோரை கலங்கச் செய்தது. தஞ்சாவூர் ஆர்.எம்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துலெட்சுமி(35), இவர் இரண்டு பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது கணவர் புகழேந்தி, பால் வியாபாரம் செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன் இவர் காலில் ஏற்பட்ட காயத்தால் தற்போது நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். இந்நிலையில் முத்துலெட்சுமி, பசுக்கள் கறக்கும்பாலில் வரும் வருமானத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் முத்துலெட்சுமி வளர்த்தபசு மாடு ஒன்று அதே பகுதியில் நின்றிருந்தது.அப்போது ஆவின் பால் நிறுவன வேன் ஒன்றுபசுவின் பின்பக்கத்தில் மோதியதில் பசுவின்பின்பக்க காலில் பலத்த காயம் ஏற்பட்டதோடு மாட்டின் முட்டிக்கும் பாதத்திற்கும் நடுவே எலும்பு முறிந்து தொங்கியது. இதனை பார்த்தவேன் டிரைவர் நிற்காமலேயே சென்று விட்டார்.வலியால் துடித்த பசு காலை தூக்கியவாறு அலறியது. பசு படும் வேதனையை பார்த்த அவ்வழியாக சென்ற மக்களில் பலர், பசுவிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவ நினைத்தனர். பின்னர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்தனர். ஆனால் கால்நடை மருத்துவக் கல்லூரி தரப்பில் இருந்து, ஆம்புலன்ஸ் இருக்கு, ஆனால் பணியில் டாக்டர் இல்லை என பதில் அளித்தனர். தொடர்ந்து மாட்டின் துன்பநிலையை மக்கள் எடுத்துக் கூற, ப்ளூ கிராஸ்அமைப்பின் நம்பர் தருகிறோம். அவர்களிடம் பேசி கொள்ளுங்கள். இல்லை என்றால் போனை டாக்டருக்கு கனெக்ட் செய்கிறோம். அவர் சொல்லும்படி நீங்களே சிகிச்சை அளியுங்கள்” எனக் கூறினர். ஒரத்தநாடு கால்நடைமருத்துவக் கல்லூரியின் இந்த அலட்சிய பதிலால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அழுத உரிமையாளரை தேற்றிய பசு 

இதற்கிடையே அருகில் இருந்தவர்கள் முத்துலெட்சுமியிடம் நடந்ததை கூறினர். பதறியடித்து ஓடி வந்த அவர், மாட்டின் கழுத்தை கோர்த்து கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினார். “அய்யோ கால் இப்படி உடைந்து தொங்குதே. நீ இனிமேல் எப்படி நடப்ப, ரத்தம்கொட்டுதே நான் என்ன செய்வேன், நாலு மாசம் சினையா இருக்குற இந்த நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே. இதை எப்படி தாங்கப் போற” என கதறியது அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது.இதில் முத்துலெட்சுமி, பசுவை கட்டிக் கொண்டு கதறி அழுத போது, தன் வலியைபொறுத்துக் கொண்டு அந்த பசு, தனது உரிமையாளரான முத்துலெட்சுமியின் தலையை நாக்கால் தடவி அழுகையை நிறுத்தச் சொல்லி தேற்றியது மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வாயில்லா ஜீவன் தான்எங்களுக்கு மூன்று வேளை சோறு போடுகிறது. இனி நான் என்ன பண்ணப் போறேன்”என்று அழுது புலம்பியபடி முத்துலெட்சுமி மாட்டை மெதுவாக அழைத்து சென்றார். இதுகாண்போர் கண்களை குளமாக்கியது.