tamilnadu

img

இந்தியாவை பிளவுபடுத்துவதை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.18- மதச்சார்பற்ற இந்தியாவை மதத்தின் பெயரால் பிளவுபடுத்து வதை கண்டித்தும் தேசிய குடி யுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். இந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்து புறக் கணிப்பு செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக் குழு சார்பில் செவ்வா யன்று ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் கண்டன உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் நன்றி  கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதிக்குழு செய லாளர்கள், கட்சி உறுப்பினர்கள், தோழமை சங்கத்தினர் கலந்து கொண்டனர்.