tamilnadu

img

வாலிபர் சங்க உறுப்பினர் மீது பொய் வழக்கு சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி: திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் புத்தாநத்ததில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்தும் காவல் உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று புத்தாநத்தம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக் குழு உறுப்பினர் பி.பாலு தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கண்ணன், வி.சீனிவாசன், கே.கருப்பையா, எம்.தங்கராஜ், பி. வெள்ளைச்சாமி. வாலிபர் சங்க வட்டத் தலைவர் இளையராஜா, வட்ட துணைச் செயலாளர்கள் கே. மாசிலாமணி, கே.வேலுச்சாமி, வட்டக் குழு உறுப்பினர்கள் சி.அய்யாவு வினோத்குமார், அஜித்இ கே.செவ்வந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;