tamilnadu

img

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்

தஞ்சாவூர், ஆக.21- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண் டித்து, அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டத்தில் ஆக.20 தொடங்கி, மக் கள் சந்திப்பு இயக்கம் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.  கட்சி சார்பில் பட்டுக்கோட்டை நக ரில் பொதுமக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, பாண்டியன், மோரீஸ் அண்ணாதுரை, கார்த்தி, லெட்சுமி கலந்து கொண்ட னர். கரம்பயத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஜீவா னந்தம், வீரக்குறிச்சியில் பெஞ்சமின், உலகநாதன், நம்பிவயலில் பால சுப்பிரமணியன், சுரேஷ், அய்யாவு, தாமரங்கோட்டையில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி, மகேஸ்வரி, அண்ணா குடியிருப்பில் எஸ்.பால கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.  சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றி யம் திருக்காட்டுப்பள்ளியில் ஒன்றியச் செயலாளர் கே.காந்தி தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சிவ சாமி, சம்சுதீன், முருகேசன், உதய குமார், ஸ்ரீதர், காளிதாஸ், ரமேஷ், செபஸ் தியார், பன்னீர் கலந்து கொண்டனர். 

பூதலூர் தெற்கு ஒன்றியம் பூத லூர், செங்கிப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இயக்கம் நடை பெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர், விஜயகுமார், சித்தி ரவேல், கே.ராஜகோபால், ராஜூ, வசந்தா, அஞ்சலி தேவி, பாலசுப்பிர மணியன், சந்திரபோஸ், தமிழரசன், மலர்கொடி, சோலை ரமேஷ், சந்திர போஸ் கலந்து கொண்டனர்.  திருவோணம் ஒன்றியத்தில் வெட்டுவாக்கோட்டை, தோப்ப நாயகம், கொள்ளுக்காடு உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெற் றது. ஒன்றியச் செயலாளர் பி. கோவிந்தராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராமசாமி, விதொச ஒன்றியச் செயலாளர் எஸ்.பாஸ்கர், வி.ச ஒன்றியத் தலைவர் முருகேசன், கிளைச் செயலாளர்கள் சுரேஷ், வீர முத்து, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கும்பகோணம்  கட்சியின் தேசம் காப்போம் பிரச் சார இயக்கம் குடந்தை நகரில் ஏ.ஆர்.ஆர் காலனியில் நடைபெற் றது. நிகழ்வில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சின்னை.பாண்டி யன், அறிவுராணி, பேரா.அரங்க. சுப்பையா, பக்கிரிசாமி, வெங்கடே சன், டி.ஏ.சந்திரசேகரன் பங்கேற்றனர். குடந்தையில் கர்ணகொல்லை தெரு வில் கிளை செயலாளர் பழ.அன்பு மணி, ஜி.கண்ணன், பகத்சிங், சி. சண்முகம், ரமேஷ் அம்பேத் பங்கேற்ற னர்.

;