tamilnadu

img

சிஏஏ-வுக்கு எதிராக சிபிஎம் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிஏஏ குறித்து வெளியிடப்பட்ட குடியுரிமை திருத்தம் சட்டமா? குடி கெடுக்கும் திட்டமா என்ற புத்தகத்தை சிபிஎம் திருவெறும்பூர் ஒன்றியக்குழு சார்பில் குமரேசபுரம், தமிழ் நகர், எழில் நகர் உள்ளிட்ட அதன் சுற்று வட்டார பகுதியில் வீடு, வீடாக வழங்கி சிஏஏவுக்கு எதிராக பிரச்சாரம் நடை பெற்றது. பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செய லாளர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ ராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவி, தெய்வநாயகம், சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.   தரங்கம்பாடி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் தொடர் இருப்புப் போராட்டத்தில் கடந்த 11 நாட்களாக ஈடுபட்டனர். நாகை வடக்கு மாவட்ட அனைத்து 69 முஸ்லிம் ஜமாத் கூட்ட மைப்பு சார்பில், மயிலாடுதுறை ஷாஹின் பாக்’ என தலைப்பிட்டு நடத்தப்பட்ட போராட்டத்துக்கு, கூறை நாடு ஜமாத் தலைவர் சபீர்தீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசு களுக்கு எதிராக கண்டன முழக்கங்க ளை எழுப்பினர்.

;