tamilnadu

img

காந்தி மார்க்கெட் பகுதியில் , சிஐடியு வாக்குச் சேகரிப்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.10 -மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் கை சின் னத்தில் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர்(சிஐடியு) புதனன்று காந்தி மார்க்கெட் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்து வாக்குசேகரித்தனர். இதில் சுமைப்பணி தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டத்தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா,சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமர், இங்கிலீஷ் காய்கறி சங்க தலைவர் சேகர்,கிருஷ்ணமூர்த்தி, சாமிதுரை, வை.கோ,ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;