tamilnadu

img

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

கரூர்: கரூர் காந்தி கிராமம் நகராட்சி பூங்காவில், அகில இந்திய திருவள்ளு வர் மாணவர் இளைஞர் இயக்கம், விஜயலட்சுமி பன்னாட்டு பள்ளி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை இணைந்து திருவள்ளுவர் தின விழா நடை பெற்றது. அகில இந்திய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கரூர் பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் தலைமையில் திரு வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தி அனை வரும் திருக்குறள் ஓதினர். தொடர்ந்து  மாணவ மாணவியர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருக்குறள் பாடினர்.  நிகழ்ச்சியில் ராமசுப்ர மணியன் சிறப்புரையாற்றினார். விஜயலட்சுமி பன்னாட்டு பள்ளி தாளாளர் வீ.சிவசுப்ரமணியன்,  முதல்வர் கார்த்திகா, வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் கவிதா ராமசுப்ரமணியன், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திலகவதி, காமராஜ், கிராம நிர்வாக அலுவலர் திலீபன், சார்-பதிவாளர் இலக்கியா மற்றும் காந்தி கிராமம் பகுதி வாழ் இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினர்.

;