tamilnadu

img

அரசு மருத்துவமனைக்கு கட்டில், மெத்தை வழங்கல்

திருச்சிராப்பள்ளி, மே, 16-திருச்சியில் அறம் மக்கள் நலச் சங்கம் தொடக்க விழா,பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, சங்கத் தலைவர் ராஜா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும்விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்க தலைவர் ராஜாதலைமை தாங்கினார். ஓம் லாஸ்ரீ நமச்சிவாய கைலாயினிதேவி சோமநாத் கிரி விழாவை தொடக்கி வைத்தார். திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாரதா, தந்தை ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன், மக்கள் மறுமலர்ச்சி கழகத் தலைவர் பொன்.முருகேசன் ஆகியோர்வாழ்த்தி பேசினர்.விழாவில் ரத்ததானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு இரும்பு கட்டில்கள், படுக்கை விரிப்புகள் வழங்குதல், ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் சங்கத்தின் தலைவர் ராஜாவுக்கு கௌரவடாக்டர் பட்டத்தை குளோபல் கல்வி மேம்பாட்டு குழும நிறுவன தலைவர் செல்வம், முன்னாள் ஐகோர்ட் நீதிபதிசாமிதுரை ஆகியோர் வழங்கி வாழ்த்தி பேசினார்கள். விழாவில் மாநில துணைத்தலைவர்கள் சாகுல்ஹமீது, இளங்கோவன், மாநில பொதுச்செயலாளர் பாபு, துணைபொதுசெயலாளர்கள் அறிவுமணி, பால்ராஜ், சங்க ஆலோசகர் பிரபாகரன், சட்ட ஆலோசகர் பழனியப்பன் உள்படபலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைப்புச் செயலாளர் பாதுஷா வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் நன்றி கூறினார். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.