tamilnadu

img

தோழர் ஆழி அரங்கராஜன் நினைவேந்தல் கூட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 13- நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அறிவொளி இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர் நலச் சங்கம் ஆகியவற்றில் முன்னணித் தலைவராகவும் சிறந்த நாடகக் கலைஞராகவும் புகழ் பெற்றுத் திகழ்ந்த தோழர் ஆழி.இராம.அரங்கராஜன் கடந்த 2-ம் தேதி காலமானார். தோழர் ஆழியின் நினைவேந்தல் கூட்டம், நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில், அரசு ஊழியர் சங்கக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் தலைமை வகித்தார். நாகை-நாகூர் அரிமா சங்கத் தலைவர் ஜி.காளிமுத்து சிறப்புரையாற்றினார். தோழமைச் சங்க நிர்வாகிகள் வி.பாலசுப்பிரமணியன், பி.செல்வராஜ், எம்.குருசாமி, எம்.காந்தி, சித்திராகாந்தி, சு.மணி, சொ.கிருஷ்ணமூர்த்தி, தேசிய நல்லாசிரியர் இரா.பாலு, கவிஞர் ஆவராணி ஆனந்தன், பி.காத்தமுத்து, எஸ்.ரெங்கநாதன், எல்.பி.வசந்தி, எஸ்.கணபதி, எம்.மேகநாதன், ரமேஷ் உள்ளிட்டோர் புகழுரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் கவிஞர் எஸ்.எம்.ஆரிபு நிறைவுரையாற்றினார்.