tamilnadu

img

கும்பகோணம் அருகே பணி நிறைவு பாராட்டு விழா

கும்பகோணம், ஜூலை 8- கும்பகோணம் திருப்பனந்தாள் ஒன்றியம் 51-சாத்தனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் திருப்பனந்தாள் வட்ட கிளைச் செயலாளருமான அன்பழ கன் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை முன்னிட்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பனந் தாள் வட்டார கிளை சார்பாக ஆசிரியர் அன்பழகனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்ட தலைவர் இரா. சுந்தர்ராஜ் தலைமை ஏற்றார். வட்ட பொருளாளர் கலைமாறன் மல்லிகா, மாரியப்பன், சிவக்குமார், வெண் ணிலா குணசெல்வி, ரெங்கேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட துணைத் தலைவர் சித்தார்த்தன் வரவேற்றார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர் அன்பழகனை பாராட்டி  மாநில தலைவர் மணிமேகலை மற் றும் தஞ்சை திருவாரூர் மாவட்ட வட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் வாழ்த்தி பேசினர். குஅன்பழகன் ஏற்புரை ஆற்றினார். வட்டார துணை செயலாளர் மது நன்றி தெரிவித்தார்.

;