tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை

குடவாசல், ஜூலை 1- திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரியில் நீடாமங்கலம், வலங்கை மான், குடவாசல் ஆகிய ஒன்றியங் களைச் சார்ந்த கட்சி உறுப்பினருக் கான சிறப்பு பேரவைக் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார்.  கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் நா.பால சுப்பிரமணியம், பி.கந்தசாமி, எம்.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் நீடா மங்கலம் சோம.ராஜமாணிக்கம், வலங்கைமான் என். ராதா, குடவாசல் ஆர்.லெட்சுமி உள்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதே போல் கட்சியின் மன்னார் குடி நகர ஒன்றியம் முத்துப்பேட்டை கோட்டூர் ஒன்றியக் குழுக்களின் கட்சி உறுப்பினர் பேரவை கோட்டூரில் திங்க ளன்று நடைபெற்றது. கோட்டூர் ஒன்றி யச் செயலாளர் எல்.சண்முகவேலு தலைமை வகித்தார். மன்னார்குடி முத்துப்பேட்டை இடைக்கமிட்டி செய லாளர்கள் எஸ்.ஆறுமுகம், எம்.திரு ஞானம், கு.பாலசுப்பிரமணியன் முன் னிலை வகித்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் வீ.மாரிமுத்து அரசியல் விளக்க வுரையாற்றினார். மூத்த தோழர் எஸ். தங்கராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெரு மாள், ஆர்.குமாரராஜா, கே. தமிழ்மணி, மாவட்டக்குழு உறுப்பி னர் கே.வி.ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். கோட்டூர், முத்துப் பேட்டை, மன்னார்குடி ஒன்றிய நகர இடைக்கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

;