அறந்தாங்கி: புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பொதுப் பணித்துறை சார்பில் புதிய கட்டட பணி துவக்க விழா, ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.ரெத்தின சபாபதி, வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், புதிய கட்டிட கட்டுமான பணியை துவக்கி வைத்தார். ரூ.2,92 கோடி மதிப்பில் வட்டாட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்க ளுடன் நவீன வசதியுடன் கட்டப்பட உள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.ராஜ நாயகம், கோட்டாட்சியர் குணசேகர் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.