திருத்துறைப்பூண்டி, ஜூலை 4- திருத்துறைப்பூண்டி ஒன்றுபட்ட ஒன்றியத்தில் மணலியின் கட்சி கிளைச் செயலாளராக இருந்த மூத்த தோழர் வி.ராமசாமி 18-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி வியாழன் அன்று மாலை நடைபெற்றது. நினைவிடத்தில், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்டச் செயற்குழு கே.என்.முருகானந்தம், ஒன்றியச் செயலாளர்கள் டி.வி.காரல் மார்க்ஸ், பி.இராமச்சந்திரன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.மணி யன், எம்.முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.