tamilnadu

img

குடியுரிமைத் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ரயில் மறியல்

திருச்சிராப்பள்ளி, டிச.19- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இந்திய மாண வர் சங்கம் சார்பில் வியாழனன்று திருச்சி ரயில்வே ஜங்சனில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வல மாக வந்த மாணவர்களை தடுத்து நிறுத்தி காவலர்கள் செய்தனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி  மாவட்ட தலைவர் துளசி தாஸ், மாவட்ட துணைச் செயலாளர் கியூபா ஆகியோர் பேசினர். மறியலில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு கிளை செயலாளர் தீனா, தலைவர் ராகுல், யுடிசி கல்லூரி கிளை தலைவர் சூர்யா, துணைத் தலைவர் கப்பீஸ், பிஹப்கல்லூரி கிளைத் தலைவர் மோனிகா, செயலா ளர் ஜெயராஜ் உள்பட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.

;