tamilnadu

img

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா துவங்கியது

தஞ்சாவூர், ஏப்.3- தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோவிலின் சித்திரை திருவிழாவைமுன்னிட்டு, பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் கோவில் வாளகத்தில் ஸ்ரீசந்திரசேகர் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்குள் புறப்பாடாகி, காலை 7 மணி முதல் 8 மணிக்குள் மேளதாளம் முழுங்க, ஓதுவார்கள் திருமறைமந்திரம் ஓத கொடியேற்றம் நடந்தது. புதன்கிழமை மாலை பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடும், தொடர்ந்து, ஏப்.14-ம் தேதி வரை விழா நாட்களில் காலை, மாலை சுவாமி புறப்பாடு, ஓலைச்சப்பரம், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் ஊர்வலம் ஆகியவைநடைபெறவுள்ளன. ஏப்.19-ம் தேதி மாலை கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. 

;