tamilnadu

img

சிதம்பரம் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழா

பொன்னமராவதி, ஏப்.1-


பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் 43-ஆவது ஆண்டு விழா,புதிதாக தொடங்கப்படவுள்ள சிடி இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்டம் 3000-ன் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன், சிடி இண்டர்நேஷனல் பள்ளி லோகோவை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நீலாவதி கோபாலகிருஷ்ணன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சிதம்பரம் பள்ளி இயக்குநரும், சிடி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனருமான சிதம்பரம் வரவேற்றார். பள்ளிமுதல்வர் முருகேசன் நன்றி கூறினார். தனி அலுவலர்ராமச்சந்திரன், பள்ளி துணை முதல்வர்கள் வைதேகி,கலைமதி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் இராசாசந்திரன், பால் டேவிட் ரொசாரியோ, வர்த்தகர் கழகத் தலைவர் பழனியப்பன், கொப்பனாபட்டி சைன் லயன் சங்க சாசனத் தலைவர் மாரிமுத்து, செம்பூதி கூட்டுறவு சங்கத் தலைவர் சிங்காரம், லயன் அறக்கட்டளை பொருளாளர் காமராஜ், ரோட்டரி சங்கத் தலைவர் வெள்ளைச் சாமி, முன்னாள் துணை ஆளுநர் இராமன், முத்தமிழ்ப் பாசறை ரமேஷ், வெங்கடேச குப்தா, முரளிதரன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், லயன் சங்க முன்னாள் வட்டாரத் தலைவர் மாணிக்கவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;