தஞ்சாவூர் ஜூலை.13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 5 ஆவது ரத்த தான முகாம் சனிக்கிழமை பட்டுக்கோட்டை சாலை கிருஷ்ணா விழா அரங்கில் நடைபெற்றது. முகாமை நகர வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசினார். வர்த்தக கழகப் பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச்செயலாளர் வல்லம் பாட்ஷா, பொருளாளர் எம்.அஷ்ரப் அலி, துணைச்செயலாளர் ஆவணம் ரியாஸ், மருத்துவ அணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளைத் தலைவர் பஷீர் அலி, செயலாளர் பர்வேஷ், பொருளாளர் இலியாஸ், மருத்துவ அணிச் செயலாளர் ஷபியுல்லாஹ், தொழிலதிபர் லண்டன் முகமது கனி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி பிரிவு மருத்துவ அலுவலர் டி.விஷ்ணு, ஆலோசகர் கே.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.