tamilnadu

img

ஊதிய பலனை வழங்க  பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கோரிக்கை

 திருச்சிராப்பள்ளி, செப்,12- 1.1.2017 முதல் ஒப்புக்கொண்ட 15 சதவீத ஊதிய பலன்- ஐடிஏ வுடன் கூடிய பென்சன் உயர்வை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருத்துவ பில்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல்- டிஓடி ஓய்வூதியர் சங்க திருச்சி மாவட்டக்குழு சார்பில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் பிஜிஎம் அலுவலக வளா கத்தில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உதவி செயலாளர் கே. தியாகராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஜான்பாட்ஷா, மாநில அமைப்பு செயலாளர் சின்னையன், பிஎன்எஸ்எல்இயு மாவட்ட செயலாளர் அஸ்லம்பாஷா, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ், மாவட்ட செயலாளர் முபா ரக் அலி ஆகியோர் பேசினர். கிளை தலைவர் பவுல்ராஜ், ருக்மாங்கதன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட உதவி தலைவர் நாகராஜன் நன்றி கூறி னார்.