திருச்சிராப்பள்ளி, செப்.29- தஞ்சை ரிவோல்ட் அமைப்பு மற்றும் சென்னை பாரதி புத்தகாலயம் சார்பில் தோழர் அறிவுக்கடல் எழுதிய இந்நாள் இதற்கு முன்னால் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை ரிவோல்ட் கவுதமன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட அதை மார்க்சிய சிந்தனை மைய சிவலிங்கம் பெற்றுக் கொண்டார். கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், ஏஐஐஇஏ தஞ்சை கோட்டத் தலைவர் செல்வராஜ், மதுரை கோட்டத் துணைத் தலைவர் சுரேஷ்குமார், தீக்கதிர் மதுரை பொறுப்பாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறிவுக்கடல் ஏற்புரையாற்றினார். கணேஷ் ராம் நன்றி கூறினார்.