tamilnadu

img

புத்தக ஆய்வு

 திருச்சிராப்பள்ளி, ஜூலை 26- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி யான லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மணிமேகலாதேவி தலைமை வகித்தார். ஆங்கி லத்துறை தலைவர் கார்த்திக், வணிகவியல் துறைத்தலை வர் சாமிநாதன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். நிகழ்ச்சியில் கவிஞர் சீதாவெங்கடேஷ் எழுதிய ராசாத்தி சிறுகதை தொகுப்பை கணிதவியல் மூன்றாம் ஆண்டு மாணவி சுபலெட்சுமி மதிப்புரை செய்தார். கவிஞர் சீதா வெங்கடேஷ் உலகமயமாக்கல் சூழலில் சிறுகதையின் நிலைமை என்ன? சிறுகதை எவ்வாறு இந்த சமூகத்தை மாற்றுகிறது? என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக பேரா சிரியர் மணிகண்டன் வரவேற்றார். பேராசிரியர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.