tamilnadu

img

பட்டமளிப்பு விழா நடத்தாத பாரதிதாசன் பல்கலை. பட்டம் பறக்க விட்டு மாணவர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.30 -

      மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தாத பாரதிதாசன் பல்கலைக் கழகத்தை கண்டித்து இந்திய மாண வர் சங்கத்தினர் பட்டம் விடும் போராட்டம் நடத்தினர்.

      தமிழ்நாட்டில் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் ஒன்றான பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி  மாவட்டத்தை மையமாகக் கொண்டு  இயங்கி வருகிறது. இதன் நகர வளாக மான காஜாமலையில், பொருளியல், சமூகப்பணி, கணினியியல் மற்றும் தொலையுணர்தல் பள்ளிகளும், கல்விப் பணியாளர் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன.  

      இக்கல்வி நிறுவனம், திருச்சியை யொட்டிய டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என  8 மாவட்டங்களில் இருக்கும் 123 கல்லூ ரிகளில் ஆட்சி செலுத்திவருகிறது. அதில் 123 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரி களும் அடங்கும். இவற்றுள் 8 அரசுக் கல்லூரியும் 11 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் தன்னாட்சி நிறு வனங்களாக செயல்பட்டு வரு கின்றன. இதைத் தவிர்த்து 8 பல்கலை க்கழகக் உறுப்புக் கல்லூரிகளும் உள்ளன.

    பாரதிதாசன் பல்கலைக்கழகம் சுமார் மூன்று ஆண்டுகளாக மாணவர் களுக்கு பட்டம் வழங்காமல் இருக் கிறது. இதுகுறித்து பல்கலைக்கழகம் நிர்வாகத்திடம் கேட்டபோது, மாண வர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்து வதற்கு தமிழ்நாடு ஆளுநரும் பாரதி தாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தரு மான ஆர்.என்.ரவி உரிய அனுமதி வழங்காமல் இருக்கிறார் என்றனர்.  

    இதனை கண்டித்தும், தமிழக அரசு  உயர் கல்வித்துறை இதில் உடனடி யாக தலையிட்டு, படித்து முடித்து  காத்திருக்கும் 5 லட்சம் மாணவர் களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்த வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில், பட்டமளிப்பு விழா உடையணிந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பு பட்டம் பறக்க விட்டனர். இந்திய மாணவர் சங்க திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் சூரியா தலை மை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ஜி.கே.மோகன் கண்டன உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.