tamilnadu

img

ஏ.வி.சி. கல்லூரியில் தமிழரும், தாவரமும் கருத்தரங்கு

மயிலாடுதுறை, செப்.20- நாகை மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி தமிழாய்வுத் துறையின் திண்ணை அமைப்பின் சார்பாக தமிழரும் தாவரமும் என்ற கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடந்தது.  தமிழாய்வுத் துறை பேராசிரியர் முனைவர் க.மகேஷ்வரி தலைமை வகித்து பேசினார். திண்ணை அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழாய்வுத் துறைத் தலைவருமான முனைவர் சு.தமிழ்வேலு  முன்னிலை வகித்து பேசினர். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தி.மா.சதீஷ் கண்ணன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.சியாமளா ஜகதீஸ்வரி, தமிழாய்வுத் துறைப் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர் க.பாலமுருகன் ஆகியோர் செய்தனர். முன்னதாக இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி வ.ஆர்த்திகா வரவேற்றார். இரண்டாமாண்டு இளங்கலைத் தமிழ் மாணவி மா.அபிநயா நன்றி கூறினார்.