tamilnadu

img

இலவச வீட்டுமனை கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். சாலை போக்குவரத்து மசோதாவை கைவிட வேண்டும். வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.  முசிறி கைக்காட்டி பகுதியில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ரிக்சா ஓட்டுனர் சங்கம் (சிஐடியு) சார்பில் செவ்வாயன்று முசிறி கைக்காட்டி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத்தலைவர் குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஆட்டோ  சங்க மாவட்டச் செயலாளர் சம்பத், சிஐடியு  புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர்.