districts

img

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

முசிறி, ஜூன் 12- திருச்சி மாவட்டம் முசிறியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் இணைந்து கைகாட்டி ஆட்டோ நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செய லாளர் டி.பி. நல்லுச்சாமி தலைமை வகித்தார். ஒன்றிய  குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலா ளர் பார்த்திபன், துணைத் தலைவர் வடிவேல், இலை ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  தொட்டியம் பகுதி வானப்பட்டறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் சிறப்புரையாற்றினார்.