திருச்சி மாவட்டம் தில்லை நகர் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனருக்கு தலைக்கவசம் அணியாதவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது ஆட்டோ ஓட்டுனர்கள் மத்திய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிராப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார் (32). இவர் பத்து வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். திருச்சியில் இருந்து தில்லைநகர் பகுதியில் பயணி ஒருவரை 6 ஆம் தேதி அழைத்து வந்துள்ளார். பயணியை இறக்கிய பின்னர் அவரது கைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், தலைக்கவசம் அணியாததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சி பகுதி முழுவதும் ஆட்டோ ஓட்டுனர்கள் என்றே தெரியாமல் வண்டி எண்ணை குறித்து காவல்துறையினர் வரம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது தெரியவந்தது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டம் ஏதேனும் புதிதாக இயற்றி உள்ளாரா என மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.