tamilnadu

img

பாராட்டு விழா

மன்னார்குடி, ஆக.9-  அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று 70 வயது நிறைந்தவர்களுக்கு பாராட்டு விழா, தஞ்சையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில் விழா நடைபெற்றது.  அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இணை ஆணையர் முதல் அலுவலக உதவியாளர் வரை 22 பேர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை ஓய்வு பெற்றோர் சங்க மண்டல தலைவர் டி.கோவிந்தராஜு தலைமை தாங்கினார். மாநில தலைவர் நெ.இல.ஸ்ரீதரன், பொதுச்செயலாளர் இரா.ஞானசம்பந்தம், மாநில பொருளாளர் எம்.கணேசன், மாநில துணைத் தலைவர் மு.செல்வராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.  அறநிலையத்துறை தஞ்சை மண்டல இணை ஆணையர் க.தென்னரசு, உதவி ஆணையர்கள் செ.சிவராம்குமார், பெ.வில்வமூர்த்தி, ம.ரமேஷ், பி.தமிழ்ச்செல்வி, இணை ஆணையர் (ஓய்வு) எஸ்.ஜெயராமன், துணை ஆணையர்(ஓய்வு) வே.கோவிந்தராம், மத்திய செயற்குழு உறுப்பினர் அ.தனபாலன், அ.க.எழிலரசு ஆகியோர் பாராட்டி பேசினர். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில் செய்திருந்தனர். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  இதில் மண்டல செயலாளர் ப.முத்தையா, பொருளாளர் எம்.கருப்புசாமி, துணைத்தலைவர் க.மாரிமுத்து, இணைச் செயலாளர்கள் பா.ரேணுகா, வே.கண்ணன் மற்றும் என்.பழனித்துரை, எஸ்.காயாம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.