தஞ்சாவூர் ஆக.2- தஞ்சாவூர் மக்கள் மன்றத்தில் சோழமண்டல நாண யவியல் கழகம் சார்பில் 19-ஆவது ஆண்டாக பழங்கால நாண யங்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை தலைவர் செந்தில் நா.பழனிவேல் தொடங்கி வைத்தார். நிறுவனர் மு.துரைராசு வரவேற்றார். செய லாளர் அ.பூபதி, பொருளாளர் கு.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில், சங்க கால நாண யங்கள் உள்பட பல்வேறு நாடுகளின் நாணயங்கள், பண த்தாள்கள் இடம்பெற்றன. மேலும், சங்க காலத்தில் பயன்ப டுத்தப்பட்ட சுடுமண் பொருட்கள் உள்ளிட்ட பழமையான பொ ருட்களும் இடம்பிடித்தன. கண்காட்சியின் தொடக்கமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஆக.4 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.