tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

பள்ளிகளில் ஆண்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.  வட்டாரக் கல்வி அலுவலர் கே. கலாராணி தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் அ. அங்கயற்கண்ணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கே.கோகுலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் எம். மஞ்சுளா, பள்ளியின் முன்னாள் மாணவர் ச.தங்கராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ச.சித்ராதேவி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் சி.லெட்சுமணசாமி நன்றி கூறினார்.  மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மதன் பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி தலைமையில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் கா.கலாராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கே.கோகுலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.முத்துக்கிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கா.சத்தியா முன்னிலை வகித்தனர்.  பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ச.இளமதியன் ஆண்டறிக்கை வாசித்தார். பட்டிமன்ற நடுவர் கோவி.தாமரைச்செல்வன் உரையாற்றினார். ஓய்வு தலைமையாசிரியர் வை. கலைச் செல்வி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

அசோகா பள்ளி ஆண்டு விழா

மன்னார்குடி அசோகா சிசு விஹார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 40 ஆம் ஆண்டு விழா, பள்ளித் தாளாளர் எம்.ஜி. வெங்கடராஜன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வி. சுந்தரி, அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர். மணிவண்ணன், சாதனைகள் புரிந்த மாணவர்கனை பாராட்டி பரிசுகள் வழங்கி உரையாற்றினார். பள்ளி அளவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 494 மதிப்பெண்களைப் பெற்று சாதனை புரிந்த மாணவர் கே. சுப்ரியா மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கே. சுப்ரியா, வி, மோகன பிரபா, எஸ் அஸ்மதுல் ஜெஸ்ரியா, ஆர்.கே. நிவேதா டி. கே.நிகிதா, எஸ். சஹானா, பி. கமலேஷ் ஆர். தனவர்ஷனி ஆகியோருக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தடகளம் மற்றும் லான் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சுழல் கோப்பைகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில், ஆசிரியர் ஜி. நித்திய பிரபா நன்றி கூறினார். ஆண்டு விழாவில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ருவிளையாட்டம் சவுரிராசன் பள்ளியில் முப்பெரும் விழா

மயிலாடுதுறை, மார்ச் 8-  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே யுள்ள திருவிளையாட்டம் சவுரிராசன் அரசு உதவி பெறும்  உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா இலக்கிய மன்ற நிறைவு விழா, பெற்றோர் ஆசிரியர் கழக விழா என  முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலாளர் மருத்துவர் சா.வீர பாண்டியன் தலைமை வகித்தார், கல்வி நிறுவனங்களின் தலைவர் செள.குமார், பத்மாசனி அவினாஸ், கு.தீபக்ராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.மீனாட்சி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் நிவேதா எம். முருகன், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரி யர்களையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கிப் பேசினார். தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள  மாணவ மாணவியருக்கு, தனது சொந்த செலவில் எழுது கோல் வழங்கினார்.  முன்னாள் மாணவ்கள் உதவி தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2013-2014 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 48 பேரும் இணைந்து பள்ளியின் கல்வி பயன்பாட்டிற்காக ரூ.40 ஆயிரம் மதிப்பிலான ப்ரொ ஜெக்டரை வழங்கினர். முன்னாள் தலைமை ஆசிரியர் நா. இரமேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி, ஆசிரி யர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.