திருச்சிராப்பள்ளி, அக்10- இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் புரட்சியாளர் சேகுவேரா வின் நினைவு நாளில், சிறப்புபேரவைக் கூட்டம் புதனன்று தாராநல்லூர் சிவாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. பேரவை கூட்டத்திற்கு சந்திர பிரகாஷ் தலைமை வகித்தார். அறிவுக் கடல், இந்நாள் இதற்கு முன்னால் நூல் குறித்தும், சமூக வலைதளம் குறித் தும் பேசினார். எதிர்கால பணி குறிந்து மாவட்ட செயலாளர் லெனின் பேசி னார். முன்னாள் மாவட்டச் செயலாளர் வெற்றி செல்வன், மாநிலக்குழு உறுப்பினர் வினோதினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் மத்திய அரசு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதோடு தமிழகத்திலுள்ள காலி பணி யிடங்களை நிரப்புவதில் தமிழக இளை ஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். திருச்சி ஸ்மார்ட் சிட்டி யென்று மாநகரை அழகுபடுத்தும் பணி மட்டுமில்லாமல் மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். காவேரி, கொள்ளிடம் ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய மாவட்ட தலைவராக எஸ்.சுரேஷ், துணைத் தலைவர்களாக ரெட்டமலை, கிச்சான், மாவட்ட செய லாளராக பா.லெனின், துணை செயலா ளர்களாக சீனிவாசன், வினோதினி, ஆதம் தீன் பொருளாளராக ஜெய் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்களாக அஜீத்குமார், ஏழுமலை, சேதுபதி உள்பட 25 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநிலச் செயலாளர் பாலா நிறைவுரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் சீனி வாசன் வரவேற்றார். கிழக்கு பகுதி செயலாளர் ரெட்டைமலை நன்றி கூறி னார்.