tamilnadu

img

ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க அரசாணை வெளியிடக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, அக்20- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் ஞாயிறு அன்று புத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். இணை செயலா ளர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார்.  கூட்டத்தில் இருதய நோய் நிபுணர் விஜய்சேகர் இருதய நோய் குறித்தும், பொதுநல மருத்துவர் அருண் பிர சன்னா சர்க்கரை நோய் குறித்தும் பேசி னர். மாவட்ட செயலாளர் மதிவாணன் சிறப்புரையாற்றினார். சேலம் மாநாட்டு தீர்மானங்களை விளக்கி துணைத் தலைவர் புருஷோத்தமன் பேசினார். கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கும் 5 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை வழங்க அரசாணை வெளியிட வேண் டும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி வழங்க உத்தரவிடும் போதே ஓய்வூ தியர்களையும் இணைத்து வெளியிட வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கை களை எதிர்த்து சென்னையில் வரும் 5 ம் தேதி நடைபெறும் மாநில அள விலான போராட்டத்தில் ஏராளமா னோர் கலந்து கொள்வது என்பன உள் பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  துணைத் தலைவர் சிராஜூதீன் நிறை வுரையாற்றினார். முன்னதாக துணைத் தலைவர் குருநாதன் வரவேற்றார். இணைச் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.