tamilnadu

தபால் நிலையத்தில் கட்டணமின்றி ஆதார் அட்டை பதிவு செய்யலாம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.25-திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் 33 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை கட்டணமில்லாமல் பதிவு செய்யப்படும். ரூ. 50 கட்டணத்தில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்தும்,பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது. திருச்சி தலைமை தபால் நிலையம், பாரத மிகுமின் நிலையதபால் நிலையம், அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை அருகில் உள்ள தபால் நிலையம், கைலாசபுரம் தபால்நிலையம், ஜாபர்ஜா தெரு தபால் நிலையம், எடமலைப்பட்டி புதூர் தபால் நிலையம், பொன்மலை தபால் நிலையம், அரியமங்கலம் தபால் நிலையம், ஜமால் முகமது கல்லூரி அருகில்உள்ள தபால் நிலையம், கே.கே.நகர் தபால் நிலையம், காஜாநகர் தபால் நிலையம், குழுமணி தபால் நிலையம், மேல கல்கண்டார் கோட்டை தபால் நிலையம், ஆர்டனஸ் எஸ்டேட்தபால் நிலையம், காட்டூர் பாப்பாகுறிச்சி தபால் நிலையம், பெட்டவாய்த்தலை தபால் நிலையம், புதூர் தபால் நிலையம், தேசிய தொழில்நுட்ப கல்லூரி அருகில் உள்ள தபால்நிலையம், ராம்ஜீ நகர் தபால் நிலையம், சோமரசம்பேட்டை தபால் நிலையம், தென்னூர் தபால் நிலையம், தெப்பக் குளம் தபால் நிலையம், தில்லை நகர் தபால் நிலையம், திருச்சி ஏப்போர் தபால் நிலையம், மலைக்கோட்டை அருகில் உள்ள தபால் நிலையம், திருச்சி ஆர்.எஸ். தபால் நிலையம், திருவெறும்பூர் தபால் நிலையம், உறையூர் தபால் நிலையம், லால்குடி தலைமை தபால் நிலையம், கல்லகம் தபால்நிலையம், கல்லக்குடி தபால் நிலையம், புள்ளம்பாடி தபால்நிலையம், பூவாளுர் தபால் நிலையம் என மொத்தம் 33 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை வேண்டி கட்டணமில்லாமல் பதிவு செய்யலாம். ஆதார் அட்டையில் உள்ள திருத்தங்களை ரூ. 50 கட்டணத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம். திருச்சி தலைமைஅஞ்சல் அலுவலகம், ஆதார் அட்டை பதிவு மற்றும் திருத்தம்செய்யும் சேவை பணியை பாராட்டி சான்றிதழ் பெற்றுள்ளனர். தற்போது இந்திய அளவில் சேவை செய்வதில் இரண்டு மாதமாக முதல்நிலையில் இருந்து வருகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை பயன்படுத்தி ஆதார் அட்டை பதிவு செய்யவும், திருத்தம் செய்தும் பயன்பெறாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;